Tuesday, April 3, 2007

மூர்த்தி வீதி தையிட்டி

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, வெளிச்சவீடு, புகையிரதநிலையம், வாசிகசாலை, துறைமுகம்,மாவிட்டபுரம் கந்தசாமி கோவில்,ஊறணி, ஆவலைச்சந்தி, மயிலிட்டி, பலாலி, சாந்தகச்சந்தி, சனிட்டொரியம், டச்சு வீதி, மற்றும் இவைக்குட்பட்ட ஆயிரக்கணக்காண குடிமனைகள், காணிகள், தோட்டங்கள், கோவில்கள், சர்ச்சுகள், சனசமுகக்கூடங்கள், பாடசாலைகள், மைதானங்கள், தியெட்டர்கள், அழகிய கடற்கரை, மற்றும் பலவனவும் இங்கு வாழ்ந்து போர் காரணமாக போட்டது போட்டபடியிறுக்க அவசர அவரசமாய் குடிபெயர்ந்த மக்கள் மறந்து போயிருப்பார்களோ தெரியவில்லை.

இது நடந்தது 1990 மே மாதம்,பதினெழு ஆண்டுகளாகிவிட்டன, இந்தா சண்டை முடியப்போகுது இதோ ஊர் போகிறோம் என்று தற்காலிகமாய் பலவிடங்கலில் தங்கியிருந்தவர்கள் மேலும் குடிபெயர்ந்து புலம்பெயர்ந்து எங்கெங்கோ சென்று விட்டார்கள், பலர் எங்கு வாழ்கிறார்களோ தெரியவில்லை,எனது தாய்தந்தையரும் பல அவர்களையொத்த
வயதினரும் தாம் பிறந்து வாழ்ந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வோமா என்ற தீராத ஏக்கங்களுடன் இறைவணடி ஏகிவிட்டார்கள்,எஞ்சிய முதியவர்களும் அதே ஏக்கங்களுடன் வாழுகிறார்கள்.

ஏனையோர் தாம் வாழ்ந்த வாழ்க்கை, வாழ்விடங்கள், சொத்துக்கள், சேகரித்தவைகள், உறவுகள், சமுக/சமய பங்களிப்புகள் என்பனவற்றை இழந்து வாழ்வாதாரங்கள் தேடி உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள்தான் ஆனால் இந்தப்பதினேழு ஆண்டுகளில் தம் வாழ்விடங்கலுக்கு சென்று பார்த்துவரக்கூட அனுமதி மறுக்கப்பட்டவர்களாய்த்தான் வாழ்கிறார்கள்.

"மூர்த்தி வீதி தையிட்டி" இப்பெருங்குடிபெயர்வில் தொலைந்துவிட்ட ஒரு முகவரி, எதிர்காலம் "அதியுயர் பாதுகாப்பு வலயம்" என்ற போர்வையில் இம் முகவரியை நிரந்தரமாய் அழித்துவிடுமா? அல்லது திரும்பவும் பதியப்படுமா? யாரரிவாரோ?