கடந்த வெள்ளிக்கிழமை(20/07/2007) டொரன்ரோ கனடாவில் வெளிவந்த National Post பத்திரிகையில் "Ailing 75-year-old grandmother dumped from home into garbage" என்ற தலைப்பில் பின்வரும் செய்தியை வாசிக்க நேர்ந்தது:
சின்னம்மாள் பழணியப்பன் என்ற ஈரோட்டைச்சேர்ந்த 75 வயது மூதாட்டி அவரின் மகளின் உத்தரவின்படி பேரப்பிள்ளைகளால் வீட்டிலிருந்து
தூக்கிவரப்பட்டு குப்பைக்குள் வீசியெறியப்பட்டதாகவும், குப்பைக்குள்
முனகல்ச்சத்தம் கேட்டு சிலரால் காப்பாற்றப்பட்டதாகவும், மகளிடம்
போகவே விரும்புவதாகவும் ஆனால் சரியான முகவரியை அவரால் கூறமுடியாமலிருப்பதால் அதிகாரிகள் தடுமாறுகிறார்கள்,
எனவும் அச்செய்தி தேரிவிக்கிறது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என தாய்தந்தையர்களை வணங்குதலுக்கும்
மரியாதைக்கும் முன்னிலைப்படுத்திய எமது கலாச்சாரத்தில் அதுவும்
பெரியாரின் மண்ணிலா இந்தக்கொடுமை?
சீதனக்கொடுமைக்கும், ஈவ்டீசிங்கிற்கும் சட்டங்களும் தண்டனைகளுமுள்ள
அரசமைப்பில் முதியபிரஜைகள் பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும் முக்கிய கவனமெடுத்தல் அவசியம்.
No comments:
Post a Comment